யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளனர்.
கடந்த 27 நாட்களாக தொடரும் கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு பகுதியிலிருந்து இராணுவம் வெளி யேற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.