கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

0
216
கேப்பாபுலவு மற்றும் வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய  உழைப்பாளர் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்   இன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இப் போராட்டத்தில் கோப்பாபுலவு மக்களின் நிலங்கள் எந்த நிபந்தனைகளும் தமாதமும் இன்றி விடுவிக்கப்படவேண்டும், வலி வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன, அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது, இராணுவமே மக்களின் நிலங்களை விட்டு வெளியேறு, நல்லாட்சியின் போலி முகமே பதில் சொல் ஆகிய கோசங்களை முன்வைத்து கவனயீர்பு போராட்டம் நடைபெற்றது.
இப் போராட்டதில் பல்வேறு  அமைப்புகள் மற்றும் பெருமளவான சிங்கள மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here