தமது நிலங்களை மீட்க கடந்த 31.01.2017 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேபாப்பிலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப் படும் போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் புதன்கிழமை 22.02.2017 அன்று பிரான்சு பாராளு மன்றத்திற்கு அருகில் பகல் 15.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.