சிறீலங்கா ஜனாதிபதியின் உறுதிமொழியை ஏற்க கேப்பாபுலவு மக்கள் மறுப்பு!

0
211


எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் இன்று (14)தெரிவித்துள்ளனர்.
கொழும்பில், சிறீலங்கா ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின்அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறீலங்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும், போராட்டத்தை கைவிடுமாறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களைச் சந்தித்த மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.
எனினும், காணிகளுக்குள் எம்மை செல்ல அனுமதித்ததன் பின்னரே நாம் போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை போராட்ட த்தை கைவிடமாட்டோம் என அம்மக்கள் மாவட்டச்செயலரிடம் தெரிவித்துள்ளனர். மக்கள் இவ்வாறு தெரிவித்த நிலையில் மாவ ட்ட செயலர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இப்பகுதியில் 54 குடும்பங்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி விமானப்படை முகாமுக்குள் உள்ளடங்கியுள்ளது.
42 ஏக்கர் காணியில் 25 ஏக்கர் காணியைவிடுவிக்க கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்றஅமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விமானப்படையினர் சம்மதித்துள்ளனர்.
எனினும் உறுதிமொழியையடுத்து போராட்டத்தை கைவிடமாட்டோம்எனவும், காணிகளை விடுவித்தால் மாத்திரமே போராட்ட த்தை கைவிடுவோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொட ர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here