யாழ்.அரசடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு : 4 பேர் சிக்கினர்

0
207


யாழ்.அரசடிப் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு மற்றும் பெற்றோல் குண்டு வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.அரசடிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (30) வர்த்தக நிலையமொன்றின் மீது, 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 10 இளைஞர்கள் பெற்றோல் குண்டு வீசியதுடன், வர்த்தக நிலையத்தில் நின்ற இளைஞர்கள் மீது வாளால் வெட்டித் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும் கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலின் பின்னர், அந்தப்பகுதி வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளிகளை பெற்றுக்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞர்களை கைத
அரியாலை, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள யாழ்.பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக எந்தவித முற்பகைகளும் தமக்கு இல்லை என்றும் எதற்கு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here