கேப்பாலிலவு மக்கள் பேரணி – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்தார்.

0
231


முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கேப்பாபுலவில் விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து புலவுக்குடியிருப்பு வரை காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கறுப்புக்கொடிகளை ஏற்திய வண்ணம் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.


காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here