யாழில் மூன்று மாணவர்களை காணவில்லை; காவல்துறையில் முறைப்பாடு!

0
172

யாழில் விளையாடச் செல்வதாக கூறி சென்ற மாணவர்கள் மூவரை காணவில்லை என யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறையிடப் பட்டுள்ளது.
யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார்(வயது 14) ஹென்றிமோன் அபிசேன்(வயது 14) விசுப்டியோன் (வயது14)  ஆகிய மூன்று மாணவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரும் ஒரே பகுதியில் வசித்து வருபவர்கள்.
குறித்த மூன்று சிறுவர்களும் நேற்று (30.01.17) மாலை பாடசாலை மைதானத்தில் விளையாடச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
எனினும் வெகு நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாத காரணத்தினால் பதற்றமடைந்த பெற்றோர் மூவரையும் உறவினர்கள், அயலவர்கள் வீடுகளிலும் தேடியுள்ளனர்.
இருப்பினும் சிறுவர்களை காணவில்லை என யாழ்.காவல்துறையினரிடம் முறையிடப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here