மோட்டார் சைக்கிள் விபத்து; குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி!

0
186
மோட்டார் சைக்கிளும், வடி ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இட த்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கொடிகாமம் கச்சாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
கெற்பேலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வடி வாகனமும், கெற்பேலியிலிருந்து கச்சாய் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கெற்பேலி மேற்கு மிருசுவிலைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் வினோத்குமார் (வயது32) என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உரிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸார் வடி வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here