கொத்மலை பிரதேசத்தில் மலையிலிருந்து தவறி வீழ்ந்து பெண் மரணம்!

0
118
தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து எடுப்பதை கண்கானித்து கொண்டிருந்த பெண் மேற்பார்வையாளர் (கங்காணி) ஒருவர் தவறுதலாக 50 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தாயாரான, விஸ்வநாதன் விமலாவதி (47) என்பவரே மிக பரிதாபகரமான முறையில்  உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, குறித்த பெண் புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பயனளிக்காததையடுத்து உயிரிழந்துள்ளார்.
கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில், 30 ஆம் இலக்கத்தில் வசிக்கும் குறித்த பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித் பிரதேச மக்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்ற அதேவேளை  குறித்த பிரதேசத்திலுள்ள தோட்ட பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here