விபத்தில் மரணமடைந்த வவுனியா மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம்!

0
338
அண்மையில் இடம்பெற்ற விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவி நேற்று வெளியான க.பொ.த  உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா தனது சிறிய தாயாரான மருத்துவர் கௌரிமனோகரி நந்தகுமாருடன் வாகனத்தில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கையில் குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தார்.
மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக் கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இம் மாணவி மாவட்ட மட்டத்தில் தற்போது முதலாமிடத்தினை பெற்றுள்ள நிலையில் பாடசாலை சமூகத்துடன் வவுனியா மக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here