மல்லாவி மண்ணில் பண்டார வன்னியனின் சிலையின் உருவமைப்பையே எதிர்க்கின்றோம்!

0
320

2.01.2017 அன்று மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பண்டார வன்னியனின் சிலை என்று தெரிவிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களால் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. சிலையின் உருவமைப்பு தொடர்பாக மல்லாவி இளைஞர்கள் பலரும், சமூக பிரதிநிதிகள் பலரும் தமது ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திய போதும் விழா ஏற்பாட்டு குழுவினர் அதனை கவனத்தில் எடுக்காமல் சிலை திறந்து வைத்தமை கவலைக்குரியது.
அதுமாத்திரமன்றி சிலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை

*தமிழரசு கட்சியின் வன்னியை பிரதிநிதித்துவ படுத்தும் மல்லாவி மற்றும் மன்னாரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் என்றும்

*பண்டாரவன்னியனுடன் ஒன்றாக இருந்து சாப்பிட்டவர்கள்,பண்டார வன்னியனுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களே

இப்போது சிலையின் உருவமைப்பை எதிர்க்கின்றார்கள் என்றும் சம்மந்தமே இல்லாமல் கூறிக் கொள்வது வேதனைக்குரிய ஒன்றே.

இங்கு அனைவரும் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்

நாம் எதிர்ப்பது மல்லாவியில் சிலை அமையப் பெற்றதையோ அல்லது குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரையோ அல்ல சிலையின் உருவமைப்பையே எதிர்க்கின்றோம்.

பண்டாரவன்னியனின் உருவப்படம் கூட ஒரு வீரன் எப்படி இருப்பான் என்றதொரு கற்பனையில் வரையப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் தற்போது மல்லாவியில் அமைக்கப்பட்ட சிலையில் ஒரு வீரனுக்குரிய பண்புகள் சிறிதளவு கூட பிரதிபலிக்கப்படாமலே செதுக்கப்பட்டுள்ளது.

எம்மால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி செய்யும் வேலைகளில் தவறிருந்தால் தட்டிக் கேட்பதற்கு எமக்கு உரிமையுண்டு.சிலை ஒன்றும் இன்றைக்கு நாளைக்கு பார்த்து பெருமைப்பட்டு செல்கிற விடயம் அல்ல. பல சந்ததிகள் கடந்தும் நிலைத்திருக்கின்ற ஒன்று.

வரலாற்றில் இடம்பிடிக்க காட்டுகின்ற முனைப்பை இவ்வாறான சிலைகளின் உருவமைப்பில் காட்ட வேண்டும்.

சம்மந்தப்பட்டவர்கள் விரைவில் சிலையை மாற்றியமைப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
-பிரகாஷ் ராஐ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here