முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 42 குடும்பங்களின் காணிக ளுக்கு பதிலாக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றுக்காணிகளை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.
கையகப்படுத்தியுள்ள 59 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவம் ஏனைய 42 குடும்பங்களுக்கான காணிகள் விடுவிக்கப்படப்போவது இல்லையெனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணி உரிமையாளர்களை சந்தித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி சிறிஸ்கந்தராசா கலந்துரையாடியுள்ளார்.
இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் கேப்பாபுலவு மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி தொடரந்தும் நிலைகொண்டுள்ளது. எனினும் மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்பட்டு மக்கள் மீள்குடியே ற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடு த்திருந்தனர்.
இந்த நிலையில் காணி விவகாரம் தொடர்பில் இராணுவத்தினர் பெண்களை தமது இராணுவ முகாமிற்குள் அழைத்து கலந்துரையாடுவதை அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
மாதிரிக்கிராமத்தில் தொடர்ச்சியாக வசிக்க முடியாது என தெரிவிக்கும் மக்கள் தமது காணிகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கடற்தொழிலை மேற்கொள்வதற்கான பகுதியை விடுவிப்பதனூடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மாற்றுக்காணியை தாங்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கும் மக்கள், தமது சொந்த நிலத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவம் அவர்கள் தெரிவித்துள்ளனர்


