தமிழீழதேசத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் நேசித்தவரும், தமிழீழதேசத்தின்
விடுதலைப்பயணத்தில் முதல் பெண் வித்தாக வீரச்சாவடைந்த இரண்டாம் லெப்டினன் மாலதி (செல்வி சகாயசீலி) அவர்களை தமிழீழதேசத்துக்கு அளித்த நாட்டுப்பற்றாளரான பேதுருப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று ஆட்காட்டிவெளி மன்னாரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இரண்டு மணியளவில் நடைபெற்று இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆட்காட்டிவெளி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.