பிரபல கவிஞர் இன்குலாப் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று காலமானார்.
இவருடைய இயற்பெயர் சாகுல் ஹமீது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் இவர். ”நாங்க மனுசங்கடா”, ”சூரியனை சுமப்பவர்கள்”, ”மீட்சி” போன்ற படைப்புகள் மிகவும் பிரபலமானவை. அவரின் மறைவுக்கு கவிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.