ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு!

0
544

27.11.2015 அன்று ஸ்ராஸ்பூர்க் மாநகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. பொதுச்சுடரை திரு. சகாதேவன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து  தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மாணவர்கள் அணிவகுத்து நிற்க தமிழீழத் தேசியக்கொடியை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் திரு. கிருபானந்தன் நடராசா அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய, அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் சகோதரி திருமதி. பத்மநாதன் பத்மாவதி; அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர்துயிலுமில்லப் பாடலைத் தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டதுடன் மலர்வணக்கமும் நடைபெற்றது.

மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரமறவர்களின் நடுகற்கள் நாட்டப்பட்டு கார்த்திகைப் பூவும் சூடப்படடிருந்த காட்சி கண்கொளாக் காட்சியாக இருந்தது.

மிகவும் உணர்வுடன் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் மாவீர் பெற்றோர், உறவினர் மதிப்பளிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், எழுச்சி நடனங்கள், கவிதைகள், பேச்சுகள் இடம் பெற்றதுடன் பாரீஸ்நகரத்தில் இருந்து வருகை தந்திருந்த திரு. குலராஜ் அவர்களின் (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்) சிறப்பு உரையும் நடைபெற்றிருந்தது.

மாவீரர் நினைவாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் பங்கு கொண்ட  மாணவர்களுக்கு மாவீரர்நினைவுப் பரிசில்களும், கேடயங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இறுதியில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்தாரக மந்திரத்துடன் மாவீரர்நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

SONY DSC

SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC

img_0976 img_0968 img_0969

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here