ஜெனிவா எழுச்சிப்பேரணியில் கலந்துகொண்ட தமிழ் மக்களுக்கான தொடருந்து நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது!

0
632

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது.
தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு மிகவும் உணர்வெழுச்சியோடு பிரான்சு வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டதுடன், பிரான்சு வாழ் வெளிநாட்டு பிரமுகர்களையும் தம்முடன் அழைத்துச்சென்றிருந்தனர்.
வழமைபோன்று இம்முறையும் மக்களுக்கு வேண்டிய உணவு வசதிகள் தொடருந்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
தமிழ்மொழியிலான விசேட அறிவித்தல்கள், தமிழீழ தேசிய கானங்கள் ஒலிக்க தமிழ் மக்களின் தொடருந்து வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

dscn4406 dscn4407dscn4408 dscn4411 dscn4412 dscn4413 dscn4414 dscn4416 dscn4750 dscn4753 dscn4757 dscn4760 dscn4774 dscn4778 dscn4780 dscn4784

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here