பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு!

0
844
arjonthaiதியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமாகிய நேற்று 15.09.2016 வியாழக்கிழமை பிரான்சில் தியாகி திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
thhhஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 12 தினங்களும் காலை 10 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்படும். thhhhபிரான்சு தமிழர் ஒருய்கிணைப்புக்குழு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுவணக்க எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் கலந்த கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். thh-1image
ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here