சென்னையில் நேற்று தீக்குளித்து காவியமான எழுச்சித் தமிழன் விக்கினேசின் உடல் அரச மருத்துவமனையில் இருந்து அவனது பிறந்த ஊருக்கு இன்று கொண்டுசெல்லப்பட்டது.
இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று அனுப்பிவைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ்நாட்டுக் காவல் துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.







