தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் யாழ். பிரதான பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறைச்சாலைகளில் பல காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் உறவினர்களால் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது .
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தனர்.