தொடருந்து மீது கல் எறிந்தால் இனி துப்பாக்கிச் சூடு!

0
322
srilankatrainபயணித்துக் கொண்டிருக்கும் போது தொடருந்துக்கு கல் எறிபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக வேண்டி ஒரு தொகைத் துப்பாக்கிகள் ரயில்வே பாதுகாப்புப் பிரிவுக்கு பெற்றுக் கொண்டுள்ளதாக தொடருந்து பாதுகாப்பு இராணுவத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கியினால் சுமார் 15 மீற்றர் தூரத்தில் உள்ள ஒருவருக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும். வெலிசர கடற்படை முகாமிலிருந்து 25 துப்பாக்கிகள் இவ்வாறு பெறப்பட்டுள்ளன.
ஏற்கனவே, தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் குறுந்தூர இலக்கு கொண்ட துப்பாக்கிகளையே பயன்படுத்துகின்றனர். இவ்வகையான துப்பாக்கிகள் 192 தற்பொழுது திணைக்களத்தில் உள்ளன. புதிதாக பெற்றுக் கொண்டுள்ள துப்பாக்கிகள் தொடருந்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய காலப் பகுதியில்  பயணித்துக் கொண்டிருக்கும் தொடருந்துமீது கல் எறிந்து தாக்குதல் நடாத்தும் சம்பவங்கள் 12 பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here