கிளிநொச்சியில் வாய்க்காலிலிருந்து முதியவர் ஒருவரின் சடம் மீட்பு!

0
264

imageகிளிநொச்சி உருத்திரபுரம் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்காலிலிருந்து முதியவர் ஒருவரின் சட லம் நேற்று பதினோரு மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சடலமாக கண்டுபிடிக்கப்பட்டவர் உருத்திரபுரம் சிவநகர் பாடசாலைக்கு அருகில் வசிக்கும் எழுபத்து ஐந்து வயதான இராமு சண்முகம் என்ற முதியவர் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

நேற்று உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஜெயந்திபுரத்தில் உள்ள தனது மகளை பார்வையிடுவதற்காக காலை எட்டு மணியளவில் சென்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று 10.50 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த பயணி ஒருவர் குறித்த வாய்க்கால் பகுதியில் சடலம் இருப்பதனை அவதானித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து, சம்பவ இட த்திற்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றத்தடயவியல் பொலிஸார் ஆர ம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அத்துடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன் றின் நீதிபதி மற்றும் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு கிளி நொச்சி பொது வைத்தியசாலையில் வைத்து பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட இரு ப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக முதியவர் தடு மாறி வாய்க்காலில் வீழ்ந்தாரா அல்லது விபத் தினால் வாய்க்காலினுள் வீழ்ந்து இறந்தாரா எனும் பல கோணங்களில் கிளிநொச்சிப் பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகி ன்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here