கராச்சி சாலை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு!

0
238

karashiகராச்சியில் பயணிகள் பேருந்தும், ஆயில் டேங்கர் லாரியும் மோதி கொண்டு தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 57 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கராச்சி நகரில் இருந்து சுமார் 70 பயணிகளோடு ஷிகர்பூர் சென்று கொண்டிருந்த பேருந்து மீது எரிபொருள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து மற்றும் லாரி பற்றி எரியத் தொடங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு வாகனங்களும் அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என கராச்சி நகர ஆணையர் சித்திக் தெரிவித்துள்ளார். பேருந்திலும் அளவுக்கதிமான பயணிகளை ஏற்றி வந்ததாக, விபத்தில் இருந்து தப்பித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here