ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெறுகிறார் மஹிந்த ராஜபக்ஷமக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்தும் அவர் இன்று காலை வெளியேறிவிட்டார்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை அவர் சந்தித்த பிறகு தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்.


