நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா

0
6

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று 08.09.2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இந்நிலையில் நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

நல்லூர் மகோற்சவ தேர்த்திருவிழா நாளையும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here