பிரான்சில் 14 ஆம் நாளில் மூல்ஹவுஸ் நோக்கிப் பயணிக்கும் மனித நேய ஈருருளிப் பயணம்!

0
65

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 26.07.2026 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 14 ஆவது நாளான இன்று 08.09.2026 செவ்வாய்க்கிழமை பிரான்சில் 1 Place de la mairie, 68000 Colmar பகுதி மாநகரசபை முன்றிலில் இருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்து, மூல்ஹவுஸ் நோக்கிப் பயணிக்கிறது

நேற்று 07.06.2026 திங்கட்கிழமை மாலை 1 Place de la mairie, 68000 Colmar நகரபிதாவிடம் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மனுவைக் கையளித்த பின்னர் நிறைவடைந்தது.

குறித்த மனிதநேய ஈருருளிப் பயணம் பிரான்சில் இருந்து சுவிஸ் நாட்டினுள் சென்று எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றிலைச் சென்றடையவுள்ளது.

ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனைவரையும் 14.00.2026 திங்கட்கிழமை ஐ.நா.முன்றிலில் இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றுகூடலில் அணிதிரளுமாறு மனிதநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

(எரிமலை செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here