
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் இன்று (26.08.2026) புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் 22 வயதான யுவதியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகர்ப் பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் அக்யசா (வயது- 22) என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் முறையாக இயங்கவில்லை எனவும், விபத்து நடந்த வேளையிலும் சமிக்ஞை விளக்குகள் சீராக இயங்கவில்லை எனவும் அப்பகுதிப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.





