
பட்டினிக்கெதிரான பிரெஞ்சு அமைப்பின் மனிதநேய பணியாளர்கள் 17 பேர் மூதுரில் படுகொலை செய்யப்பட்டதன் 20 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, குறித்த பணியாளர்கள் நினைவாக பிரான்சின் புறநகர் பகுதி கிளிச்சி நகரில் நிறுவப்பட்டுள்ள நினைவுக்கல்லின் முன்பாக இன்று 04.08.2026 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழர ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் குறித்த மனிதநேய அமைப்பின் உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உயிர் இழந்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்;.










