தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி 2026 – முன்னேற்பாடுகள் தொடக்கம்.

0
11

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவெழுச்சி எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இன்று (02.08.2026) அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் சிரமதானப் பணிகள்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நினைவிடத்தை சுத்தப்படுத்துதல், சுற்றுப்புறத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நினைவேந்தல் நிகழ்விற்கான தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நினைவெழுச்சி நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here