
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
.இந்த விபத்து ஏ-9 பிரதான வீதியில் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களான குமாரசிங்கம் சுகிர்தன் (வயது 21), ஜெயராசன் மனோகரன் (வயது22) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு,, சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




