
மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இன்று 10/07/2026 ( வெள்ளிக்கிழமை ) மக்கள் போராட்டம். இடம்பெற்றது.

விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும் இராணுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரக் காணிகள் உடனடியாக மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே குறித்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது., தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் மக்களுடன் இணைந்து தங்களது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்! என் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.



