
பத்துமாதம் தன்னை வயிற்றில் சுமந்த தாயை நினைக்கவில்லை
நிலாவைக்காட்டி சோறுட்டிய கைகளை நினைக்கவில்லை.
பட்டினியிருந்து படிக்க வைத்து அழகு பார்த்தவர்களை நினைக்கவில்லை.
வாழ்வில் ஒன்றாய் பயணித்த நண்பர்களை நினைக்கவில்லை.
தேவாரமும், செபமும் ஆன்மீக வழிபாட்டை நினைக்கவில்லை.
பருவவயது உள உணர்வுகளுக்கு இடம் கொடுக்க நினைக்கவில்லை.
ஒருவாய் உணவை உருசியாக உண்ண வேண்டும் என்று நினைக்கவில்லை.
சினிமா பார்த்தும், சில்மிசங்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை
அன்பும், காதலும் கொண்ட ஓரக்கண் பார்வைக்கு இடம் கொடுக்கவில்லை.
கண்ணில் கலங்கி வந்த கண்ணீரை யாருக்கும் காட்டவில்லை
காரணம் இந்தப் பிறவியில் என் பெரும் கடன் ஒன்று உண்டு
அது என் மக்கள் சுதந்திரம், என் மக்கள் நின்மதியான வாழ்வு, என் மக்கள் விடுதலை என்று உம்மைக் காற்றினில் கரைத்துக் கொண்டீர்கள்.!
பிறப்பு ஒருமுறை! இறப்பும் ஒருமுறை! காதல் ஒருமுறை! வாழ்க்கை ஒருமுறை! ஆனால், நீங்கள் எம் இனம்மீது கொண்ட உயிர்க்காதல் பலமுறை. அது நம் உயிர் இருக்கும் வரை!
யூலை 5 ஆம் நாள் உங்கள் நினைவில் ஒளியேற்றி மலர் கொண்டும், கண்ணீரை உமக்காக தருகின்றோம்.


