
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை பதின்நான்காம் நாள் மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

நாளை திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழாவும் மறுநாள் தெப்பத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இன்று தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் இடம்பெற்றமையால் பெரும் எண்ணிக்கையான அடியார்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் எண்ணிக்கையிலான அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றியமையையும் காணமுடிந்தது.

குறிகாட்டுவான் இறங்கு துறையில் வரலாறு காணாத மக்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதல் நின்றதை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வரும் அனைத்து அடியார்களின் பசி போக்கிட அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் உணவு வழங்கப்பட்டு வருவதையும் காணமுடிந்தது.




