
தமிழ் சினிமாவின் ‘”திரைக்கதை மன்னன்”‘ என்று ஒட்டுமொத்தத் திரையுலகாலும் இரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட அசாத்திய கலைஞர் கே. பாக்யராஜ் இன்று 27.06.3026 சனிக்கிழமை மாரடைப்பால் சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 73 ஆகும்.
தமிழர்களின் எளிமையான வாழ்வியலைத் தனது படைப்புக்கள் ஊடாகத் தந்த பெருமை இவரைச் சாரும்.
எளிய மனிதர்களின் வாழ்வியலை, குடும்ப உறவுகளின் எதார்த்தத்தை, தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எவரும் தொடாத புதுமையான திரைக்கதை பாணியில் செதுக்கிய பெருமை இவருக்குரியது. ‘
‘தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த காவியங்களைப் படைத்து, பல தலைமுறை இயக்குநர்களுக்குத் திரைக்கதை இலக்கணம் கற்றுக்கொடுத்த அந்தப் பேனா இன்று மௌனமாகிவிட்டது.
இவருடைய விருப்பத்தின் பேரில், இவரது கண் தானம் செய்யப்பட்டது. இவர்மறைந்த போதும் இவருடைய விழிகள் உலகைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கப் போகின்றன.
இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பெருந்துயரமாகும்.


