எதிர் வரும் யூன் 22 ஆம் நாள் பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பான போராட்டம்!

0
88

கோட்டாபயவின் கைது விவகாரமும், இழுத்து மூடப்படும் தமிழர் விவகாரமும்… எதிர் வரும் யூன் 22 ஆம் நாள் பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பான போராட்டமும்.

2009 போர் முடிந்ததும், ஐநாவில் இலங்கை சமர்ப்பித்த பிரேரணை போன்று 2026/ 2027 இல் வரலாம்?

எந்த முறையிலேனும் கோட்டாபய கைதாக வேண்டும் என்ற புரிதலற்ற தமிழர் மனநிலை!

சிதறுண்டுள்ள சூழலில், புத்தி சொல்லியும் பயனற்ற தமிழ்த்தரப்பு!
ஈழத்தமிழர்களின் எண்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் போராட்டம், 2009ஆம் ஆண்டு மிக வேகமாக சர்வதேச மட்டத்திற்கு நகர்ந்தது..
அதற்குபெரும் பலமாக இருந்தது மக்களின் அரசியல் சனநாயகப்போராட்டமே. 2009 பின்னர் எமது யெனீவா மனிதவுரிமைகள் செயலகம் முன்பாகவும், மற்றும் பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக தொடுத்த நீதிக்கான போராட்டம் சிங்களதேசத்தையும், ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! பாரிசிலிருந்து வரும் யூன் 22 ஆம் நாள் திங்கட்கிழமை பெல்ஜியத்தில் இடம் பெறும் உரிமைக்காக எழு தமிழா போராட்டத்திற்கு செல்வதற்கான பேரூந்து ஏற்பாடுகள் எம்மால் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் அனைத்து தமிழ்மக்களும் பங்கு கொண்டு உங்கள் வரலாற்றுக்கடமையை தொடர்ந்து செய்யுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அரசியல் துறை – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here