நிரந்தர நியமனம் கோரி வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

0
137

protest-3தமக்கான நிரந்தர நியமனங்களைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.

தங்களின் நியமனம் தொடர்பான பிரச்சினைக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு வழங்குவதாக வட மாகாண கல்வி அமைச்சர் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபோதிலும், தற்போது 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், நியமனம் இன்றி தாம் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்தனர்.

சுமார் 60 தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்
குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here