முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்று மே 18 – 2026 , முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் உள்ள தமிழ் இன அழிப்பு நினைவுத்தூபியின் முன்பாக நினைவுகூரப்பட்டது .
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு , அதிகாரபூர்வமாக நினைவேந்தலை ஏற்பாடுசெய்திருந்தது.
தாயக நேரம் காலை 10.15 மணி – பிரகடனம் வெளியிப்பட்டது. காலை 10.29 மணிக்கு – மணி ஒலித்தததைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு – அகவணக்கம் செலுத்தப்பட்டது. காலை 10.31 மணிக்கு – பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.காலை 10.35 மணிக்கு – மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழர் தாயகப் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அலையெனத் திரண்டுவந்து கண்ணீர்மல்கத் தமது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.
உணர்வுபொங்க முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கானங்களும் கண்களை மேலும் நனைத்தன.
தமிழீழ தாயகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் வலிகளைச் சுமந்த ஊர்தியும் நேற்று மாலை முதல் அங்கு மக்களின் அஞ்சலிக்கு நிறுத்தப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இளையோர்களும் அங்கு பணிகளில் முன்னின்று ஈடுபட்டு வருகின்றனர்.
(எரிமலை செய்திப் பிரிவு)
மேலதிக காணொளி மற்றும் படங்கள் எமது “எரிமலை ஊடகம்” முகநூல் பக்கத்தில் காணலாம்.


