யாழில் இடம்பெற்ற மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

0
14

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழு அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. திரு உருவப்படத்துக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here