
வடகொரியா நேற்று பலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏவுகணை கடலில் வீழ்ந்துவிட்டதாகவும், அது ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 27 அன்று இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா ஏவியதன் பின்னர், அணு ஆயுதம் ஏந்திய வடகொரியாவின் முதல் ஏவுகணை இதுவாகும்.
இது அமெரிக்காவுக்கு வடகொரியாவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.


