துபாயின் முக்கிய பகுதியில் வெடிப்புச் சம்பவம்!

0
233

இன்று வியாழக்கிழமை துபாயின் முக்கிய அடையாளமான புர்ஜ் கலிஃபா அமைந்துள்ள டவுன்டவுன் பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது..

இதில் ஒரு சத்தம் மிகவும் பயங்கரமானதாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் ஈரானின் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, துபாய் கிரீக் ஹார்பர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ட்ரோன் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அந்த கட்டிடம் காலி செய்யப்பட்டதாகவும் துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் துபாய் நிதி மையத்தில் (DIFC) உள்ள சிட்டி பேங்க் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here