
சுவிற்சர்லாந்தில் Fribourg கன்ரன் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நபர் ஒருவர் பேருந்தின் உள்ளே திடீரெனத் தனது உடலில் பெற்றோல் ஊற்றித் தீ மூட்டியதை அடுத்தே பேருந்து எரியத் தொடங்கியது என்று பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
‘போஸ்ரல் பஸ்'(postal bus) எனப்படுகின்ற
பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனத்தின் பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது .
உடலில் தீ மூட்டிய நபரின் நோக்கம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. கன்ரன் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று பின்னராக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்களை வெளியிடவுள்ளனர்.
நன்றி: தாஸ்நியூஸ் – பாரிஸ்
11-03-2026


