10 ஆம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம் பிரான்சை வந்தடைந்தது!

0
220

கடந்த 12/02/2026 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து . பெல்சியம் லுக்சாம்பூர்க் , யேர்மனி நாட்டில் பல அரசியல் சந்திப்புக்களை சந்தித்து பிரான்சு நாட்டின் எல்லையினை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. கம்சயிம் நகர பிதாவுடனான உரையாடலில் பல பிரதானமான விடயங்கள் எடுத்தியம்பப்பட்டன.

குறிப்பாக, சிறிலங்கா பேரினவாத அரசு நிகழ்த்திய திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழர்களின் பூர்வீக நாடாகிய தமிழீழத்தின் விடுதலை, தமிழினப்படுகொலையை நடத்திய குற்றவாளிகளுக்கு பயண மற்றும் பொருளாதார தடை குறித்து விவரிக்கப்பட்டு இந்த விடயங்களை பிரான்ஸ் உயர் மட்டங்களுக்கு எடுத்ததுச் செல்வதாக நகர பிதா உறுதியளித்தார்.அவை நம்பிக்கையான அடுத்த நகர்விற்கும் வழிவகுத்தன கம்சயிம், சில்றிக்காம் முதல்வர்களிடத்தில் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டு, பின் ஈருருளிப் பயணம் இன்றைய நாளில் சீராற்ற காலை நிலையிலும் 40 கிலோ மீற்றர்களைக் கடந்து சில்றிக்காம் என்னும் இடத்தில் நிறைவுக்கு வந்தது.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here