பிரான்சில் இன்று ஆரம்பமான வன்னிமயில் 2026 தேச விடுதலை நடனப் போட்டி!

0
141

பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு 15 ஆவது தடவையாக நடாத்தும் தேச விடுதலைப் பாடலுக்கான வன்னிமயில் விருது நடனப் போட்டி இன்று 21.02.2026 சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு எழுச்சி பூர்வமாக பரிசின் புறநகர் பகுதியான தில்லே என்னும் இடத்தில் மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றலுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான நடுவர்களாக பல நடன ஆசிரியர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைதந்துள்ளனர்..

இன்று பாலர் பிரிவு (தனி), கீழ்ப்பிரிவு (தனி) மேற் பிரிவு (குழு) ஆகிய போட்டிகள் இடம்பெறுகின்றன.

குறித்த போட்டியில் மிக ஆர்வத்துடன் இளையோரகள் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here