
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையைச் சேர்ந்த மாணவனான வோல்டர் இருதயராஜன் டிலக்ஸன் 2026 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இன்று நடைபெறுகின்ற ஆறாவது அமர்வில் மூன்று தங்கப் பதக்கங்களுடன் கௌரவிக்கப்படவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பட்டப்படிப்புத் தேர்வில் ஊடகப் படிப்பில் முதல்நிலை மாணவராகத் தேர்வானதற்காக ஊடகப் படிப்பிற்கான ‘சகாதேவன் நிலக்சன்’ நினைவு தங்கப் பதக்கமும், 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பட்டப்படிப்புத் தேர்வில், ஊடகப் படிப்பில் அச்சு ஊடகத்தில் சிறந்த செயல்திறனுக்கான ‘ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை’ நினைவு தங்கப் பதக்கமும், ஒழுக்க நெறி சார்ந்த ஊடகவியலில் திறமைச்சித்தி பெற்றதற்காகவும் ஆனந்தி சூரியபிரகாசம் (BBC) ஞாபகார்த்த தங்கப்பதக்கம் ஆகிய மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்க்கவுள்ளார்.


