
வரலாற்றில் அன்றொரு நாள், இதே பெப்ரவரி மாதத்தில் இதே நாளில் ( 20.02.2009) ‘சிறீலங்கா’ என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு யுத்த விமானங்கள் கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்து வன்னியின் கடலோர தமிழர் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசி விட்டுச் செல்கின்றன.
சில மணி நேரங்களில் கேப்பாப்புலவு விமானத் தளத்திலிருந்து ‘தமிழீழம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு வான் கலங்கள் சிறீலங்கா தலைநகர் கொழும்பு வான்பரப்பை ஊடறுத்து பறந்து ‘சிறீலங்கா’ அரசுக்கு சொந்தமான இராணுவ – பொருண்மிய நிலைகள் மீது குண்டுகளை வீசுகின்றன.
தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வான் வழி வரலாற்று சாட்சியம் இது.
அந்த வான் தாக்குதல்களினூடாக எதிரியின் வல் வளைப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது தலைவருக்குத் தெரியும். ஆனாலும் கட்டளையிட்டார். வான் பு லி கள் உடனே வானேறினார்கள்.
ஏன் ஏனென்றால் தலைவர் இறுதிவரை வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்.
புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து மாவிலாற்றிலே போருக்கான எத்தனங்கள் தொடங்கியபோதே போதே அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
ஏனென்றால் இது தமிழீழத்தின் வரலாற்று தவறாக மட்டுமல்ல உலகெங்கும் போராடும் இனங்களின் வரலாற்றுத் தவறாக மாறிவிடும் அபாயத்தை அவர் முன்னுணர்ந்திருந்தார்.
இந்த சிந்தனையே ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாக அவரிடம் இருந்து வெளிப்பட்டது.
எனவேதான் அடிபணிய மறுத்தார்.
அதன் ஒரு பகுதியாக வான் கரும் பு லி கள் ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலை வேட்கையை உலகறித்துவிட்டு, இந்த இனத்திற்கேயுரிய தனித்துவமான கர்வத்தின் – அடங்காமையின் – சினத்தின் வெளிப்பாடாக எதிரி நாட்டு நிலைகள் மீது மோதி வெடித்தார்கள்.
தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான் பு லி கள் வரலாற்று நாயகர்களானார்கள்.
புலிகளின் பொன் விழா ஆண்டு இது. எழுபதுகளின் இறுதியில் ஒரு கைத்துப்பாக்கி வாங்க திருமணத்திற்கு அக்காவின் மணத் தோழனாக இருந்ததற்காகக் கிடைத்த அரை மஞ்சாடி மோதிரத்துடன் அலைந்து திரிந்த ஒரு அதிமானுடன் இரண்டாயிரத்தின் இறுதியில் எதிரி நாட்டு நிலைகள் மீது தனது சொந்த வான்படையை வைத்துத் தாக்குதல் நடத்தியதெல்லாம் இந்த இனத்தின் பெருமிதம் மட்டுமல்ல உலகின் போராடும் தேசிய இனங்களின் பெருமிதம் – நம்பிக்கை – வரலாறு.
எனவே புலி அரசியலை உயர்த்திப் பிடிப்போம் – புலிப் பண்பாட்டைப் பின் தொடர்வோம்.
( இரண்டாவது படம் : கேப்பாப்புலவு தமிழீழ வான் படைத் தளத்தை ஆக்கிரமித்திருக்கும் இன அழிப்பு படைகளை வெளியேறச் சொல்லி தமிழீழ மக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட வாசகம்)
தவிபு50 (1976 – 2026) 🔴🟡


