
ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரத்தில் இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிரிழந்தார்
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி.
இவரது ஊடகப் பணியைப் பாராட்டி இவருக்கு ‘#நாட்டுப்பற்றாளர்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
ஈகைப்பேரொளி_முருகதாசன் (வர்ணகுலசிங்கம் முருகதாசன்) என்பவர் #ஈழத்தமிழர்களுக்காகத் தன்னைத்தானே தீயாக அர்ப்பணித்த ஒரு போராட்ட வீரர் ஆவார்.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தலைமையகத்தின் முன்பாக ஈழத்தமிழின அழிப்பைத் தடுக்கக் கோரித் தீக்குளித்து உயிர் நீத்தார்.
அவர் உயிரிழப்பதற்கு முன் “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் 7 பக்கங்களைக் கொண்ட மரண சாசனம் ஒன்றை எழுதி வைத்தார். அதில், “உலகமே, உங்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப என்னுடைய உயிரை வழங்குகின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.













