
பிரான்சு பரிதி அன்புச் சோலை மூதாளர் அவை உறுப்பினர் அமரர். சின்னையா பத்மநாதன் (வயது 86) அவர்கள் கடந்த 20.01.2026 இந்தியா தமிழ்நாட்டில் ஆன்மீக பயணத்தின்போது காலமாகியிருந்தார்..

அவரின் இறுதி நிகழ்வு இன்று 05.02.2026 வியாழக்கிழமை வில்தனுஸ் பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட் டது.

அவரின் இறுதி நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரிதி அன்புச் சோலை மூதாளர் அவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.
அமரர். சின்னையா பத்மநாதன் அவர்கள் நீண்டகாலமாகத் தமிழ்த்தேசிய பணியில் ஈடுபட்டு வந்ததுடன் தாயகத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மனிதநேய உதவிகளைச் செய்துவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஊடகப்பிரிவு – எரிமலை)





