
“
சிறிலங்காவின் சுதந்திரதினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட, நீதியற்ற சூழலைச் சுட்டிக்காட்டி “கரிநாள்” ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளனர். எமது தாயகப் பூமியில் தொடரும் அடக்குமுறைகள், காணி அபகரிப்புகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டமானது, எமது இனத்தின் கூட்டு மனசாட்சியின் வெளிப்பாடாகும்.
குறித்த போராட்டமானது நாளை பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.
அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் பங்கு கொள்ள வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.
எமது நிலமும், எமது உரிமையும் எமக்குக் கிடைக்கும் வரை எமது அறவழிப் போராட்டம் ஓயாது.
“எழுவோம் தமிழாக! வெல்வோம் உரிமையாக!”


