
ஈழத் தமிழரைக் காக்குமாறுகோரி தமிழ்நாட்டில் தீக்குளித்து உயிர் துறந்த தூத்துக்குடி முத்தாம் ஈகைப் போராளி முத்துக்குமார் அவர்களின் 17 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று -29.01.2026 வியாழக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.






இதுகுறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
ஈழத்தமிழர் நலம் காக்கத் தன்னுயிர் ஈந்த தியாகச் சுடர் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!
என் உடலைத் தமிழ் இனத்தின் எழுச்சிக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துங்கள்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளைத் தனது மரண சாசனமாக எழுதி வைத்துவிட்டு, ஈழத்தில் நம் தொப்புள்கொடி உறவுகள் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை சாஸ்திரி பவன் முன்பு தன்னுயிரைத் தீக்கிரையாக்கிக் கொண்ட மாவீரன் கு. முத்துக்குமார் அவர்களின் நினைவு நாள் (ஜனவரி 29).
வெறும் 28 வயதே ஆன அந்த இளைஞனின் தியாகம், அன்று தமிழகம் முழுவதும் மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் மிகப்பெரிய போராட்ட நெருப்பை மூட்டியது. இந்திய அரசின் மௌனத்தைக் கலைக்க அவர் கொடுத்த விலை தன் உயிர்!
ஈழத்தமிழர் உரிமைக்காகவும், இனப்படுகொலைக்கு நீதி கோரியும் அவர் ஏந்திச் சென்ற அந்தப் போராட்டக் கனவை நாம் என்றும் மறவோம்.
வீரவணக்கம்… வீரவணக்கம்…
தமிழினத் தியாகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!
அகிலஇலங்கைதமிழ்காங்கிரஸ்
தமிழ்த்தேசியமக்கள்முன்னணி
தமிழ்த்தேசியபேரவை


