
..
யாழ் இந்து கல்லூரி, தியாகி திலீபன் உட்பட தாயக விடுதலைக்காக> பல்லாயிரக்கணக்கான விடுதலை வீரர்களை உருவாக்கிய விடுதலைத்தாய். அத்தாயின் அரவணைப்பில் தவண்டு வளர்ந்த விடுதலை வீரர்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவன்தான் பஞ்சாச்சரம் குணேந்திரன்.
ப.குணேந்திரம், நயினாதீவு 11ம் வட்டாரத்தில், அன்பான குடும்பத்தில் பிறந்து, யாழ் இந்து கல்லூரி அன்னையினால் தத்தெடுக்கப்பட்டான்.
மெல்லிய கறுத்த அழகான முகவெட்டு கொண்ட உருவம், நெற்றியில் மூன்று திருநீற்று குறி அதனாலேயே ‘பட்டர்’ என பட்டப்பெயரும் கொண்டிருந்தான்.
தமிழர் வரலாற்று தாயகமான, யாழ்ப்பாணம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் கிரிசாந்தி உட்பட பல மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், பாடசாலைகளும், பாடசாலை சூழல்களும் இராணுவ மயமாக்கப்பட்டது. இதனைக்கண்டு மனம்வருந்நியவ்களில் கருணாவும் ஒருவன்..
13ம் திகதி யூலை மாதம் 2000 ம் ஆண்டு இந்துவின் மைந்தனான ‘ சஞ்சீவன்’ கலட்டிப்பகுதியில் வைத்து படுகொலை செய்யப்படுகின்றார். தமது சக தோழனின் மரணம் மாணவர்களை விசனம் கொள்ள செய்கின்றது.
இந்துவின் தமிழ் மாணவர் சங்கமாக செயற்பட்ட மாமனிதரும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருமான நிலக்சன் தலைமையில் மாணவர்கள், இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரளும் போது ப.குணேந்திரன் நிலக்சனுக்கு அடுத்ததாக நின்றான்…
தமிழ் மாணவர் ஒன்றிய தலைவரான
ப. குணேந்திரன் (எல்லாளன்) (நயினாதீவு) அவர்களின் 18 வது ஆண்டு நினைவுநாளில் நினைவுகூருகின்றோம்….


