
வங்கக்கடலில் காவியமான தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று 16.01.2026 வெள்ளிக்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் கிட்டுப் பூங்காவில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பம்சமாக நல்லூர் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பகத்தினால் உருவாக்கப்பட்ட ‘கிட்டு ஒரு தனி மனித வரலாறு’ என்னும் தொனிப் பொருளுடன் தளபதி கிட்டுவின் வாழ்வியல் தொடர்பான ஆவணக் காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.
















